இந்த பதிவின் மூலம் அனைவருக்கும் பிடித்த கோதுமை மாவு சமோசா எப்படி செய்வது என்று படித்து தெரிந்து கொள்ளலாம்.

சமோசாக்கள் பொதுவாக வெளியில் செல்லும்போது அதிகம் விற்கப்படும் தெரு உணவுப் பொருட்கள். அதன் சுவை தனித்துவமானது என்றாலும்.

நாம் வீட்டில் செய்ய முடியாது ஏனென்றால் அவர்கள் செய்வது வேறு, ஆனால் நாம் செய்வது வேறு, ஆனால் கடையில் வாங்கும் சமோசா போலவே இருக்க வேண்டும், அதைப் படித்து தெரிந்து கொள்வோம். இந்த பதிவை வைத்து சமோசா செய்யுங்கள்..!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 200 கிராம்

மைதா மாவு – 2 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 2

மஞ்சத்தூள் – 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்

தனியா தூள் – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

சீரகம் – 1/2 ஸ்பூன்

ரவை – 2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் 200 கிராம் கோதுமை மாவு எடுத்துகொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துகொள்ளவும்.

பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சிறிதளவு உப்பு, மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை பிணைந்து அதை நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

பின்னர் அதை ஒரு மூடி போட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற விடவும்.

இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் மசித்து வைத்திருக்கும் வெங்காயம், அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் ஆகிய மசாலாக்களை அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

அது வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பின்பு அதை சப்பாத்தி கல்லில் வைத்து அதை சிறிது அடர்த்தியாக சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதை பாதியாக ஒரு கத்தியின் மூலம் நறுக்கி கொள்ளவும்.

அடுத்து நாம் பாதியாக வெட்டிய மாவை எடுத்து கூம்பு வடிவிற்க்கு அதை மடித்து அதனுள் நாம் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து அதை அடியில் மடித்து அதன் ஓரங்களை சிறிது தண்ணீர் வைத்து மூடவும்.

இவ்வாறு மீதமுள்ள மாவையும் தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சமோசாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் சமோசாவை ஒவ்வொன்றாக கடாயின் அளவிற்கேற்ப போட்டு அதை நன்கு பொன்னிறம் ஆகும் வரை வேக விடவும்.

சமோசா பொன்னிறமானதும் ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சமோசா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.