சிலருக்கு மழைக்காலம் என்றால் மாலையில் காரமான உணவுகளை சாப்பிட விரும்புவார்கள். அதிலும் எண்ணெய் பலகாரங்கள் என்றால் ரொம்பவே சாப்பிட ஆசையாக இருக்கும்.
அந்தக் நேரத்தில் வீட்டில் சாப்பிட கேட்டால் உடனே தயார் செய்வது வடை, பக்கோடா, போண்டா தான். ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன், பஜ்ஜி செய்வார்கள் ஆனால் சாப்பிட்டு அலுத்துவிட்டோம். இனி கவலை வேண்டாம் ஆந்திரா ஸ்பெஷல் மிளகாய் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!
தேவையான அளவுகள்
மிளகாய் – 10
வெங்காயம் – 1
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – 15 கிராம்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 15 கிராம்
புளி தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
செய்முறை
ஆந்திரா ஸ்டைல் மிளகாய் பஜ்ஜி:
முதலில் மிளகாயை எடுத்து அதில் நடுப்பக்கம் மட்டும் கீறி விடவும் அது ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும். அதில் உள் இருக்கும் விதைகளை வெளியில் எடுத்துவிடவும்.
இப்போது கிண்ணத்தை எடுத்துக்கொள்ளவும் அதில் வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும்.
வெங்காயத்துடன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – 15 கிராம், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து விடவும்.
இப்போது தனியாக புளி தண்ணீர் எடுத்து வைத்திருப்போம் அதனை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து அதனை கலந்து தனியாக வைக்கவும்.
இப்போது அதனை தனியாக வைத்திவிட்டு பஜ்ஜி போடுவதற்கு மாவு செய்வோம் வாங்க..! கடலை மாவு – 200 கிராம், அரிசி மாவு – 50 கிராம், கொஞ்சம் பெருங்காயம், இந்த பஜ்ஜி மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சிறிதளவு மிளகாய் தூள், 1 சிட்டிகை அளவு சோடா உப்பு சேர்த்து கலந்துவிடவும். பஜ்ஜி மாவு போல் கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும்.
இப்போது முதலில் செய்த மிளகாயை எடுத்துக்கொள்ளவும். அதில் நாம் செய்து வைத்த மசாலாவை மிளகாயின் உள்ளே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும் ஓரளவு கொதிவந்தவுடன் அதில் நாம் செய்து வைத்துள்ள மாவையும், மிளகாயையும் எடுத்துக்கொள்ளவும்.
இப்போது ஒவ்வொரு மிளகாயை எடுத்து பஜ்ஜி மாவில் நனைத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
அவ்வளவு தான் உங்களுக்கு பிடித்த சட்னியை தொட்டு சாப்பிட்டு பாருங்கள் சுவை தாறுமாறா இருக்கும்.
