நம் வீடுகளில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஏதோ ஒரு இனிப்பு நிச்சயம் இருக்கும். குறிப்பாக லட்டு, ஜாங்கிரி, அல்வா, பாயசம் என சகலமும் இருக்கும். அதனால் இன்று நாம் இளநீர் பாயாசம் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இளநீர் பாயசத்தை விரும்பி சாப்பிடுவதால், உடலுக்கு என்ன நன்மைகள்? அதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். இளநீரில் உள்ள புரதங்கள் தாய்ப்பாலில் உள்ள அதே ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.
குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும், இளநீரில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் கால்சியம் போன்ற உடலுக்கு ஆற்றலை வழங்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எனவே பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்களுக்குப் பதிலாக இளநீரைக் குடிக்க மறக்காதீர்கள். உங்களுக்கான செய்முறை குறிப்புகள் இதோ..
தேவையான பொருட்கள்
கெட்டியான பால்- ஒரு லிட்டர்
இளநீர் வழுக்கை – 2 கப்
தேங்காய் பால் – 2 கப்
சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
முந்திரி – 20
நெய்- தேவையான அளவு
செய்முறை:
இளநீர் பாயாசம் செய்வதற்கு முதலில் இளநீரை வெட்டி அதில் உள்ள வழுக்கைத் துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதில் ஒரு பகுதியை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து அடி கனமாக பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள இளநீர் வழுக்கை மற்றும் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இவையனைத்தும் நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும், தேங்காயை அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை உடன் சேர்க்கவும்.
இறுதியில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, 2 ஏலக்காய் சேர்த்து பொரித்து கொட்டினால் போதும். சுவையான இளநீர் பாயாசம் ரெடி.
இந்த பாயாசத்தைக் குழந்தைகளுக்குப் பிடித்தார் போன்று செய்ய வேண்டும் என்றால், இளநீர் பாயாசத்தின் மேல் இளநீர் வழுக்கைத் துண்டுகள் மற்றும் சிறிதளவு முந்திரி, பாதாம் போன்றவற்றை மேல் வைத்து அலங்கரித்தால் போதும். நிச்சயம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பிச்சாப்பிடுவார்கள்.
