கோடை விடுமுறைகள் குழந்தைகளுக்கு உற்சாகமாக இருந்தாலும், பெற்றோருக்கும் சவாலாக இருக்கும். பள்ளிக்குச் சென்றாலும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் சத்தான உணவையே உண்கின்றனர்.
ஆனால் கோடை விடுமுறை என்பதால் நாள் முழுவதும் விளையாடுவது, தாமதமாக சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் அதிகம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.
நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளில் இதுவும் ஒன்று. இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீஸ், மெக்னீசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
இந்த அவல் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். அதைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
அவல் – 1 கப்
வெல்லம் – அரை கப்
தண்ணீர் – கால் கப்
தேங்காய் துருவியது – கால் கப்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
நெய்- தேவையான அளவு
செய்முறை
அவல் கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் அவலை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி உருகியதும் இறக்கி விடவும். சூடு ஆறியதும் வடிகட்டிக் கொள்ளவும்.
வடிகட்டி வைத்துள்ள வெல்லத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்துக கிளறவும். பின்னர் அரைத்த அவலையும் சேர்த்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.
ஓரளவிற்குக் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
இந்த அவல் கலவையை வழக்கம் போல கொழுக்கட்டை எப்படி பிடிப்போமோ? அதுபோன்று பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும் சுவையான அவல் கொழுக்கட்டை ரெடி.
ஒருவேளை உங்களுக்கு இனிப்பு கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்றால், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைப்பதற்கு முன்னதாக வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை வதக்கிக்கொள்ளவும். பின்னர் வழக்கம் போல கொழுக்கட்டையை தயார் செய்யலாம்.
