கேசரி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இனிப்பு மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. தமிழகத்தில் கேசரி இல்லாமல் எந்தப் பண்டிகையோ, பிறந்த நாளோ, விசேஷ நாளோ நிறைவடையாது என்று சொன்னால் அது மிகையாகாது. அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான திருமண வரவேற்புகளில் கேசரி அவசியம்.

கேசரியில் பல வகைகள் உண்டு. அவற்றுள் ரவை கேசரி, சேமியா கேசரி, கோதுமை கேசரி, அவல் கேசரி, பழ கேசரி போன்றவை மிகவும் பிரபலம். இன்று நாம் காண இருப்பது பைனாப்பிள் கேசரி.

இந்த கேசரியின் சிறப்பு என்னவென்றால், இது வெறும் 3 அல்லது 4 பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய மிக எளிதான இனிப்பு. தவிர, நீங்கள் தேவையான பொருட்களை தயார் செய்தால், அவை தயாரிக்க அதிக நேரம் எடுக்காது. எனவே, இல்லத்தரசிகள் எந்த வகையான இனிப்புகளை செய்தாலும் கேசரி தான் முதல் சாய்ஸ்.

கேசரி செய்ய எளிதான இனிப்பு என்றாலும், சில சமயங்களில் செய்முறைகள் மாறிவிட்டால் ஒன்று குழைந்துவிடும் அல்லது கெட்டியாகிவிடும்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய செய்முறையை நீங்கள் பின்பற்றினால், இனிப்பான மற்றும் சுவையான பைனாப்பிள் கேசரியை எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

½ பைனாப்பிள்

1 கப் ரவை

1½ கப் சர்க்கரை

15 to 20 முந்திரி பருப்பு

10 to 12 உலர் திராட்சை

½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்

5 to 6 சொட்டு பைனாப்பிள் எசன்ஸ்

மஞ்சள் கலர் தேவையான அளவு 

எண்ணெய் தேவையான அளவு 

நெய்  தேவையான அளவு 

சிறிதளவு குங்கும பூ

செய்முறை

முதலில் முந்திரி பருப்பை நறுக்கி, பைனாப்பிளின் தோலை சீவி அதன் நடு பாகத்தை நீக்கி விட்டு சதையை மட்டும் நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் பைனாப்பிள் சதைகளை ஒரு bowl ல் போட்டு அதில் சுமார் ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பின்பு ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

நெய் சுசூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு அது லேசாக வறுபட்டதும் அதில் உலர் திராட்சையையும் போட்டு முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

முந்திரி பருப்பு பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

பின்னர் அதே pan ல் ரவையை போட்டு அது லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

ரவை வறுபடுவதர்க்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து அது லேசாக சுட்டதும் அதில் மஞ்சள் கலரை போட்டு அதை சுட வைக்கவும். (கலர் சேர்ப்பதை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

தண்ணீர் சூடானதும் அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ரவையில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை குறைத்து வைத்து ரவை நன்கு வேகும் வரை அதை வேக விடவும்.

ரவை நன்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து அதை நன்கு ரவையோடு சேருமாறு கலந்து விடவும்.

பிறகு அதில் பைனாப்பிள் எசன்ஸ்ஸை சுமார் 5 லிருந்து 6 சொட்டு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (எசன்ஸ்ஸை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

அடுத்து நாம் சர்க்கரையை போட்டு ஊற வைத்திருக்கும் பைனாப்பிளை அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பின்னர் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப நெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூவை தூவி அதை நன்கு கலந்து விட்டு அது லேசாக கெட்டியாகும் வரை அதை வேக விடவும்.

அது லேசாக கெட்டியானதும் அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரத்திற்கு பிறகு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் பைனாப்பிள் கேசரி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.