தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கைக்கீரை சூப்.
அதுமட்டுமின்றி முருங்கை சூப்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால் நாட்டு மருந்து பட்டியலில் முருங்கைக்கீரை இருக்கும்.

உடலுக்கு மிகவும் தேவையான ஹீமோகுளோபினை இரத்தத்தில் அதிகரிக்கும் தன்மை கொண்ட முருங்கை கீரை நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இந்த முருங்கைக்காய் சூப்பை ஒரு மாதத்திற்கு வாரம் மூன்று முறை குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

கீரை சூப் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. முருங்கை சூப் செய்ய முருங்கைக்கீரை இருந்தாலே போதும் மற்ற சூப்களை விட மிகவும் எளிதானது மற்றும் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

ஆனால் முருங்கைக்கீரையை இவ்வாறு சூப்பாக செய்து அவர்களுக்கு கொடுத்தால் அதை அவர்கள் விரும்பி பருகுவார்கள். இன்னும் வேண்டும் என்று அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேவையான பொருட்கள்

2 கை முருங்கைக்கீரை

8 to 12 சின்ன வெங்காயம்

1 தக்காளி

1 பச்சை மிளகாய்

2 பூண்டு பல்

1 துண்டு இஞ்சி

2 காய்ந்த மிளகாய்

1 மேஜைக்கரண்டி கடுகு

½ மேஜைக்கரண்டி சீரகம்

½ மேஜைக்கரண்டி மிளகு தூள்

½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கருவேப்பிலை

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை தட்டி, மற்றும் முருங்கைக்கீரையை பூவோடு ஆய்ந்து வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தைப் போட்டு அதை வறுக்கவும்.

சீரகம் வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும்.

தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள் தூளை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, மற்றும் நாம் ஆய்ந்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை கொதிக்க விடவும். (3 லிருந்து 4 பேர் குடிப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை இதில் ஊற்றலாம்.)
7 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை போட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.

4 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு இதமான முருங்கைக்கீரை சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.