கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று அனைவருக்கும் தெரியும். எங்கள் வீட்டில் அடிக்கடி செய்கிறோம். இதில் என்ன புதுமை என்று நீங்கள் நினைக்கலாம். இந்தக் குறிப்பைப் படியுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள சாம்பாரையும் பாருங்கள். நீங்கள் செய்யும் சாம்பாருக்கும் இந்த சாம்பாருக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு நிச்சயம் தெரியும்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் – 3
முருங்கைகாய் – 1
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 12
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – 1/4 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
துவரம்பருப்பு – 150 கிராம்
சீரகம் – 1/2 ஸ்பூன்
தேங்காய் – துருவல் சிறிதளவு
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
தாளிப்புக்கு தேவையானவை:
நெய் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கருவேப்பிலை – 1 கொத்து
வரமிளகாய் – 3
பெருங்காயம் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – 1 கொத்து
செய்முறை :
முதலில் புளியை எலுமிச்சை அளவு தண்ணீரில் கரைத்து புளி கரைசலை வைக்கவும். இந்த புளி கரைசலில் 2 தேக்கரண்டி சாம்பார் பொடி சேர்த்து கரைக்கவும். அப்படியே தனியாக வைத்துக்கொள்ளவும்.
அடுத்து, ஒரு மிக்ஸி ஜாடியை எடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு தேங்காய் துருவலைப் போட்டு, அதில் 1/2 ஸ்பூன் சீரகம், 2 சின்ன வெங்காயம், சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து, தனியே வைக்கவும்.
அடுத்து குக்கரில் 150 கிராம் பருப்பை போட்டு 3 அல்லது 4 விசில் விட்டு வேக விடவும். வேகவைத்த பருப்புகளையும் தனியாக வைக்கவும்.
அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் – 1/4 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 2, முருங்கைக்காய் – 1, நறுக்கிய கத்தரிக்காய் – 3, கறிவேப்பிலை – 2 லீப், உப்பு தேவையான அளவு சேர்த்து, இந்த காய்களை எண்ணையில் நன்கு வதக்கி கரைத்த புளி கரைசலை ஊற்றி சுமார் 2 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த புளி தண்ணீரில் முக்கால் பங்கு காய்கறிகளை வேகவைக்கவும்.
அதன் பிறகு வேக வைத்த பருப்பை சேர்த்து நன்கு கலந்து சாம்பாரை கொதிக்க விடவும். சாம்பாரின் உப்புத்தன்மையை சரிபார்க்கவும்.
சாம்பார் பருப்பும் நன்கு கொதி வந்ததும், மிக்ஸியில் செய்து வைத்திருக்கும் துருவிய தேங்காய் விழுதை ஊற்றி, மிதமான தீயில் 3 நிமிடம் மீண்டும் கொதிக்க வைத்து, கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.
இறுதியாக, நாம் சுவைக்க, மணக்க தாளிப்பு கொடுக்க வேண்டும். நெய் – 1 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, வர மிளகாய் – 3, பெருஞ்சீரகம் – 1/4 ஸ்பூன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து சாம்பாரில் சேர்த்தால் அருமையான, சுவையான கத்தரிக்காய், முருங்கக்காய் சாம்பார் ரெடி.
