பொதுவாக உருளைக்கிழங்கில் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இன்று இங்கு இருப்பது பிசைந்த உருளைக்கிழங்கு உருண்டைகள்.

இவை நமது வழக்கமான மாலை நேர சிற்றுண்டிகளுக்கு சிறந்த மாற்றாகும். இந்த மொறுமொறுப்பான மசித்த உருளைக்கிழங்கு கோலா உருண்டைகளை கெட்சப்வுடன் சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

இதில் உள்ள பெரிய விஷயம் என்னவென்றால், வீட்டுப் பொருட்களைக் கொண்டு எளிதாக, சிரமமின்றி, குறைந்த நேரத்தில் செய்துவிட முடியும். மேலும் சமையல்காரர்கள் அல்லாதவர்கள் கூட மிக எளிதாக செய்து விடுவார்கள்.

மேலும் இதற்கு நிறைய பொருட்கள் தேவையில்லை. அவசர காலங்களில் குறைந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய சுவையான ஸ்நாக்ஸ் இவை.

தேவையான பொருட்கள்

4 உருளைக்கிழங்கு

½ கப் பொட்டு கடலை

1 பெரிய வெங்காயம்

1 பச்சை மிளகாய்

½ மேஜைக்கரண்டி கரம் மசாலா

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.

25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.

பிறகு அரை கப் அளவு பொட்டு கடலையை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நைசாக அரைத்து கொள்ளவும்.

பின்னர் நாம் உருளைக்கிழங்கை மசித்து வைத்திருக்கும் bowl லை எடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொட்டு கடலை மாவில் இருந்து இரண்டரை மேஜைக்கரண்டி அளவு மாவை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், கரம் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். (தண்ணீர் எதுவும் இதில் சேர்த்து விடக்கூடாது.)

அடுத்து அதில் எலுமிச்சம் பழம் அளவு மாவை எடுத்து அதை நன்கு உருட்டி பின்பு அதை கையில் வைத்து பக்குவமாக தட்டி அதை தட்டையான வடிவிற்க்கு மாற்றி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

இவ்வாறு மீதமுள்ள மாவுகளையும் உருட்டி பின்பு தட்டி தயார் செய்து தட்டில் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சூடான பின் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி போட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

அது இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பிசைந்த உருளைக்கிழங்கு பந்துகள் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.