நாங்கள் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் மீன் குழம்பு மற்றும் கறி குழம்பு சாப்பிடுவோம், ஆனால் சில நேரங்களில் மீன், கறியை விட நண்டு மீது ஆசை இருக்கும்.

ரசத்திற்கு வறுத்த நண்டும் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும். அதேநேரத்தில் அந்த ரசத்திற்கு பதிலாக நண்டை வைத்து ரசம் செய்தால் அதன் சுவை வேறு லெவலில் இருக்கும். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!

தேவையான பொருட்கள்

கடல் நண்டு

மிளகு தூள்

மிளகாய் தூள்

இஞ்சி பூண்டு பேஸ்ட்

பிரிஞ்சி இலை

தக்காளி

வெங்காயம்

உப்பு

இந்த அனைத்து பொருட்களுமே உங்களுடைய தேவைக்கேற்ற சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை

முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.

இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.

அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.

பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.

இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி பக்கத்தில் மிளகு தூள் வைத்துகொண்டு அதில் கலந்து குடித்தால் ஐயோ டேஸ்ட் வேற லெவல்.

நண்டு ரசத்தில் மிளகு தூள் சேர்ப்பதால் நெஞ்சு சளிக்கு மிக நல்லது. மிளகு தூள் அதிகமாக சேர்த்தால் வயிறு எரிச்சல் ஏற்படும் ஆதலால் தேவைக்கு தகுந்தாற்போல் சேர்க்கவும்.