பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. இதனால், சந்தை எங்கும் கரும்பு விற்பனையாகிறது. நீங்கள் கரும்பு பிரியராக இருந்தால் கரும்பில் விதவிதமான ரெசிபிகளை தயாரித்து சாப்பிட விரும்பினால், பொங்கல் ஸ்பெஷலாக கரும்புச்சாறு பொங்கலைச் செய்யுங்கள்.
இந்த கரும்பு பொங்கல் செய்வது மிகவும் எளிது. கரும்பு பொங்கல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கரும்பு சாறு பொங்கல் செய்முறையின் எளிய செய்முறை கீழே உள்ளது.
படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப்
கரும்புச்சாறு – 1 1/2 கப்
வெல்லம் – 1/8 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – சிறிது
உலர் திராட்சை – சிறிது
ஏலக்காய் பொடி – சிறிது
செய்முறை:
முதலில் கரும்பை தோல் நீக்கி மிகச்சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். இப்படி 1 1/2 கப் கரும்பு சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, பாசிப்பருப்பை சிறிது வறுத்து தனியாக வைக்கவும்.
அதன் பிறகு அரிசியை தண்ணீரில் நன்கு கழுவவும்.
பின் குக்கரில் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு மற்றும் கரும்புச்சாறு எடுத்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.
விசில் வந்ததும் குக்கரைத் திறந்து வெல்லம் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வெல்லம் கரையும் வரை கரண்டியால் நன்கு கிளறவும்.
அதன் பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
மீண்டும் அடுப்பில் சிறிய கடாயில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து குக்கரில் வைத்துள்ள பொங்கலுடன் கிளறி இறக்கினால் சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.
