காலிஃபிளவர் எப்படி சமைத்தாலும் சுவையாக இருக்கும். அந்த வகையில் பட்டாணி சேர்த்து இதை செய்து பாருங்கள். பின்னர் நீங்கள் அதை அடிக்கடி செய்வீர்கள்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 500 கிராம்
பச்சை பட்டாணி – 1.5 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1
நல்லெண்ணெய் – 1 tsp
கடுகு – 1/2 tsp
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 3 பல்
உப்பு – 1 tsp
மஞ்சள் பொடி – 1/2 tsp
மிளகாய் பொடி – 1/2 tsp
பெருங்காயத்தூள் – 1/4 tsp
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை:
முதலில் காலிஃபிளவரை கொதிக்கும் நீரில் கழுவவும்.
பிறகு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம் தூள் சேர்த்து கலக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 5 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் கால் கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். உப்பு சேர்க்கவும்.
பிறகு காலிஃபிளவர் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கலக்கவும். பின் மூடி வைத்து 10 நிமிடம் சமைக்கவும்.
10 நிமிடம் கழித்து திறக்கவும், நன்றாக வேகும். பிறகு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் காலிஃபிளவர் பட்டாணி மசாலா ரெடி.
