இட்லி தோசையில் சட்னி, சாம்பார், பொடி என ஏதாவது இருந்தால் மட்டுமே சாப்பிட முடியும். குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி போன்ற சட்னிகளை தினமும் சாப்பிட்டு சலிப்படைந்தவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

தேவையானவை :

தேங்காய்       –     1

பொரிகடலை    –     50 கிராம்

பச்சை மிளகாய்  –     5

செய்முறை :

தேவையான உப்பு சேர்த்து உரலில் போட்டு கரகரப்பாய் ஆட்டி தேவைக்கு ஏற்ப கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்புப் போட்டு சிவந்ததும், கருவேப்பிலை போட்டு பொரித்து சட்னியில் ஊற்றவும்.

பிரியப்பட்டால் கருவேப்பிலையுடன் வடகத்தூள் அல்லது 2 வற்றல் கிள்ளிப்போட்டுப் பொரித்து ஊற்றாலாம்.

சட்னியை உரலிலிருந்து எடுக்கும் முன் புளி சிறிதளவு, வெங்காயம் 3, பூண்டு 2 பல் சேர்த்து ஆட்டி எடுக்கலாம்.