இன்றைய இயந்திர உலகில் இயங்கும் நாம், உடலுக்கு சக்தி தரும் காலை உணவை சாப்பிட மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்திருக்க மதிய உணவை விட காலை உணவு மிகவும் சிறந்தது. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

பள்ளி, கல்லூரிக்கு சென்றாலும் காலை உணவாக சிறிது சாப்பிட வேண்டும். வீட்டில் உள்ள தாய்மார்களும் தினமும் ஒரு காலை உணவை வேகமாக இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றை சமைக்க வேண்டும்.

ஒரே மாதிரியான உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சலிப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க வெறும் 5 நிமிடங்களில் கேப்பை மாவில் செய்யப்பட்ட கேப்பை ரொட்டியை செய்யலாம். உங்களுக்கான செய்முறை குறிப்புகள் இதோ.

தேவையான பொருட்கள்:

கேப்பை மாவு – 1 கப்

நறுக்கிய வெங்காயம் – அரை கப்

மிளகாய், சீரகம்- தேவைக்கு ஏற்ப

கறிவேப்பிலை – தாளிப்புக்கு ஏற்ப

கடலைப் பருப்பு- சிறிதளவு

எண்ணெய் – சிறிதளவு

உப்பு- சுவைக்கு ஏற்ப

செய்முறை:

கேப்பை ரொட்டி செய்வதற்கு முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டி பதத்திற்கு நன்கு பிசைத்துக் கொள்ளவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், சீரகம் சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து பிசைத்தால் போதும். கேப்பை மாவிற்கான மாவு ரெடி.

பின்னர் இந்த கேப்பை மாவிற்கு சுவையை அதிகரிக்க விரும்பினால் கடாயில் கடலைப் பருப்பை நன்றாக வறுத்தெடுத்து, ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

இதையடுத்து தோசைக்கல் சூடேறியதும், கேப்பை ரொட்டி செய்வதற்காக பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்தி போன்று தட்டிப் போட்டால் போதும். சுவையான கேப்பை ரொட்டி ரெடி.

இதற்கு சைட் டிஸ்ஸாக பொரிகடலை சட்னி, தக்காளி சட்னி என உங்களுக்கு எது பிடிக்குமோ? அதை வைத்து சாப்பிட்டால் போதும். சுவையுடன் ஆரோக்கியத்தை உங்களுக்குக் கொடுக்கும்.