Kaththirikaay saatham

கர்நாடகா ஸ்டைல் கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி?

மைசூரைப் பூர்வீகமாகக் கொண்ட வாங்கி பாத்(கத்திரிக்காய் சாதம்), பிஸிபேளாபாத் போன்று கர்நாடக உணவு வகைகளில் பிரபலமான மதிய உணவாகும்.

கத்திரிகாய் உடன் மசாலா ஆகிய தனித்துவமான தூள் சேர்த்து சாதத்துடன் கலந்து உண்ணப்படும் சாத வகைகளில் இதுவும் ஒன்றாகும்.

கத்தரிக்காயைக் என்றவுடன் முகம் சுளிப்பார்கள் குழந்தைகள். வாங்கி பாத் நெய், கடலை, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுவதால் விரும்பி உண்பார்கள். புளி சாதம் போல் இருக்கும்.

ஆனால் அதன் சுவை முற்றிலும் வேறுபட்டது. இதற்கு பயன்படுத்தப்படும் பொடியை ஒரு முறை தயாரித்தால், தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய்

நெய்

வேர்க்கடலை

கடலெண்ணெய்

கடலை பருப்பு

உளுத்தம் பருப்பு

தனியா

சீரகம்

வெந்தயம்

மிளகு

கிராம்பு

பட்டை

தேங்காய்

பைதாகி மிளகாய்

பச்சை மிளகாய்

கருவேப்பிலை

புளி

உப்பு

கொத்தமல்லி

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து ஐந்து டீஸ்பூன் கடலை பருப்பு, மூன்று டீஸ்பூன் உளுத்தம் பருப்பு போட்டு எண்ணெய் இன்றி மிதமான தீயில் வறுக்கவும்.

இரண்டு நிமிடத்தில் கடலை பருப்பு வறுபட்டு ஒரு விதமான வாசனையை வெளியிட்ட பிறகு ஐந்து ஸ்பூன் தனியா, அரை டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்கவும்.

இதனுடன் நறுமணம் தரும் எட்டு கிராம்பு, நான்கு துண்டு பட்டை, கால் மூடி துருவிய தேங்காய் போடவும்.

தேங்காய் கருகாமலும், கடாயில் ஒட்டாமலும் பார்த்துக் கொள்ளவும்.

உலர் வறுவலுக்கு பிறகு இவை அனைத்தையும் தனியாக வைத்து ஆற விடுங்கள்.

அடுத்ததாக அதே கடாயில் மூன்று ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி 12 பைதாகி மிளகாய் போட்டு நிறம் மாறாமல் வறுக்கவும்.

இவற்றை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைக்கவும்.

இதனிடையே அரை கிலோ அளவிற்கு வெள்ளை சாதம் வேக வைத்து கொள்ளுங்கள்.

மசாலா தயார் செய்வதற்கு கடாயில் பத்து டீஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி ஒரு டீஸ்பூன் கடுகு, நாலு பச்சை மிளகாய், கொஞ்சம் வேர்க்கடலை, தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் அரை கிலோ கத்திரிக்காய் போடுங்கள்.

கத்திரிக்காயை எண்ணெய்-ல் 70 விழுக்காடு அளவிற்கு வேக வைக்கவும்.

ஐந்து நிமிடங்களிலேயே கத்திரிக்காய் எண்ணெய்-ல் வதங்கிவிடும்.

இதனிடையே 75 கிராம் புளியை 150 மில்லி லிட்டர் சூடான தண்ணீரில் கரைத்து அதை கத்திரிக்காய் மீது ஊற்றுங்கள்.

அடுத்ததாக 50 கிராம் வெல்லம், தேவையான அளவு உப்பு சேருங்கள். புளியின் வாசனை போவதற்கு ஆறு நிமிடங்கள் ஆகும்.

இறுதியாக மிக்ஸியில் அரைத்த வாங்கி பாத் பவுடர் ஐந்து டீஸ்பூனும், அரை ஸ்பூன் பெருங்காய் தூள் சேருங்கள்.

ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்றி சாதத்தை நன்கு கிளறி கொத்தமல்லி இலை போடுங்கள். கர்நாடகா ஸ்டைல் மிக சுவையான கத்திரிக்காய் சாதம் ரெடி.

Leave a Reply

Previous Post

Next Post

Discover more from Dad's Kitchen

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading